×

காரைக்குடி காவல்நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட வந்தவர் ஓடஓட விரட்டி வெட்டி கொலை

காரைக்குடி: மதுரை, ஒத்தக்கடை அருகே திருமோகூரை சேர்ந்தவர் வினித்(எ) அறிவழகன்(40). இவர் உட்பட 9 பேர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த அலெக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளியே வந்த வினித், காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே விடுதியில் தங்கி, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். நேற்று காலை 10.30 மணியளவில், விடுதியில் இருந்து வடக்கு காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வினித் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்து காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வினித்தை ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த வினித் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த வடக்கு போலீசார், பழிக்குப்பழியாக வினித் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

The post காரைக்குடி காவல்நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட வந்தவர் ஓடஓட விரட்டி வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Karaikudi police station ,Karaikudi ,Vinith(A) Virujazhagan ,Thirumogur ,Othakadai, Madurai ,Sivagangai district ,station ,
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!